அட்டாளைச்சேனையில் கலை இலக்கிய விழா



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ட்டாளைச்சேனை பிரதேசத்தின் கலை இலக்கிய விழா அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் (27) வியாழக்கிழமை நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.சி அஹமது சாஹிர், அதிதியாக பாவேந்தல் பாலமுனை பாறூக், விசேட அதிதியாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.ரின்சான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கலாசார உத்தியோகத்தர்களான எம்.எஸ். ராஜாயா, வி. பத்மராசா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலுவலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், பிரதேச இலக்கிய விழாவில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :