உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
லக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் இடம் பெற்றன.

இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக தொழிலதிபரும் ஆசிய அபிவிருத்தி மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட சிரேஸ்ட ஆலோசகருமான றிஷாத் ஷரீப்பும் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிருவாக உத்தியோகத்தருமான எம். இராமக்குட்டி மற்றும் கல்முனைப் பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ.வாஹிட்டும் விஷேட அதிதியாக கல்முனை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்நடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். சாஜித் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களின் போசாக்கு, பாதுகாப்பு, துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊர்வலமும், மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :