சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு



பாறுக் ஷிஹான்-
லப்பின சோள உயர் அடர்த்தி மாதிரி பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் கீழ் சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) அன்று பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின்(மத்திய அரசு) நிலைய பொறுப்பதிகாரி சு.விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதிக்கு பொறுப்பான தொழிநுட்பவியல் உத்தியோகத்தர் வி.நிறூஷன் (TA)ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ சனீரின் வழிகாட்டலில் பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தில்(மத்திய அரசு) நடைபெற்றது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கான( 01) சோள விதை இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாலமுனை கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸ்ரப் திகவாவி பகுதிக்கு பொறுப்பான விவசாய போதனாசிரியர் சமீர பாலமுனை பகுதிக்கு பொறுப்பான தொழில்னுட்பவியல் உத்தியோகத்தர் கே.குகலேந்தினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :