பெறுமதிமிக்க உயிரை பாதுகாப்பு ஏறாவூரில் இடம் பெற்ற முன்மாதிரியான செயல்



ஏறாவூர் சாதிக் அகமட்-
டந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் மோட்டார் சைக்கிளில் சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் தலைக்கவசம் இன்றி மிக வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற இரண்டு இளைஞர்களை புன்னைக்குடா வீதியில் வசிக்கும் ஒரு நபர் அவர்களை நிறுத்தி இது இலங்கை மோட்டார் வாகன சட்டத்தின் 214(1),(அ) பிரிவை மீறிய தண்டனைக்குரிய குற்றம் என்பதனை மிகவும் கண்டிப்புடன் சுட்டிக்காட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்த முன்மாதிரியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி சைக்கிள் ஓட்ட அனுமதித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடிய இளைஞர்கள் விடயத்தில் சமூக பொறுப்புடன் நடந்தது கொண்டால் எமது ஊரில் ஏற்படுகின்ற பல உயிராபத்திலிருந்து எமது இளம் சமூகத்தினரை பாதுகாக்க முடியும். மேலும் குற்றங்களை பார்த்துக் கொண்டு இருப்பது அதற்கு நாமும் அங்கீகாரம் வழங்குவது போன்றதாகும்.

(கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் ஏறாவூரில் ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது )
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :