மருதமுனை அல்ஹம்றா வித்தியாலய மாணவி பாத்திமா ஜஸ்னா வலீத் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு.



பி.எம்.எம்.ஏ.காதர்-
கில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி பாத்திமா ஜஸ்னா வலீத் கிழக்கு மாகாண மட்ட பேச்சுப் போட்டியில் முதலாம் இடபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை(02-10-2022)மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மொழித் தினப் போட்டியின் போதே இவர் தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாம் ஆண்டுக்கான சமூக விஞ்ஞான வினா விடைப் போட்டியில் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பொற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவர் மருதமுனையைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத். அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறின் தாஜ் தம்பதியின் புதல்வியாவார்.இம்மாணவி தேசிய மட்டத்திற்குத் தெரிவானதையிட்டு பாடசாலை அதிபர் ஐ.உபைதுல்லா மற்றும் பாடசாலை சமூகமும் பாராட்டையும். வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :