சிராஜ் எக்ஸலன் கல்லூரியின் பரிசளிப்பு விழா



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டமாவடி சிராஜ் எக்ஸலன் கல்லூரியினால் நடாத்தப்படும் பகுதி நேர வகுப்பு பாடங்களில் திறமை காட்டிய சாதனையாளர்கள கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி சிராஜ் எக்ஸலன் கல்லூரியின் அதிபர் ஏ.எல்.ரஹீஸ் (நளிமி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் பனிப்பாளர் எம்.எம்.எம்.நவாஸ் ஆசிரியர், கல்லூரியின் நிருவாக உறுப்பினர்களான அஷ்ஷெய்க் ஏ.நஜீம் (சிறாஜி), அஷ்ஷெய்க் எம்.கபீர் (இஸ்லாஹி), கல்லூரியின் விரிவுரையாளர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்;.

இதன்போது தரம் 06, 07, 08ல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இவ்வருடத்திற்கான இரண்டாம் தவணைப் பரீட்சையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களும், பாடங்களில் கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :