இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் கற்கைகள் நிலையத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவருக்கும் நடாத்தப்பட்டு வரும் பண்ணிசை, யோகாசன, பரதநாட்டிய சான்றிதழ் பயிற்சி நெறிகளை கற்பிக்கும் வளவாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் வே.ஜெகதீசன், காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், மாவட்ட செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் லோ.சிவலோஜினி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் கற்கைகள் நிலைய நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment