சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுக் காலைக்கூட்டத்தினை மாணவர்மன்ற காலைக்கூட்டமாக மாற்றியமைக்கும் செயற்றிட்டத்தில் கடந்த திங்கட்கிழமை தரம் 4 டீ வகுப்பு மாணவர்கள் மிகச் சிறப்பான மாணவர் மன்ற காலைக்கூட்டத்தினை செய்திருந்தனர்.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் அல்-ஹாஜ் ஏ. அகமட்லெவ்வை அவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக் தோற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெற்ற மாதிரிப் பரீட்சையொன்றில் 160 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 17 சாதனையாளர்களுக்கு பரிசில்கள்; வழங்கி கௌரவிக்கப்பட்டன.
0 comments :
Post a Comment