இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு ஏறாவூர் போக்குவரத்து சாலை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்!

 


ஏறாவூர் சாதிக் அகமட்-

ன்று காலை 06.00 மணியளவில் ஏறாவூர் போக்குவரத்து சாலைக்கு முன்பாக கூடிய போக்குவரத்து ஊழியர்கள் தமக்கான எரிபொருளை வழங்குமாறு தெரிவித்ததையடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

குறிப்பாக இதேவேளை ஏறாவூர் புன்னக்குடா பிராதான வீதியை பேருந்துக்களை நிறுத்தி மறித்து தமது எதிர்ப்பு பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். 

சுமார் 01 மணி நேரம் பேருந்தை வீதியின் குறுக்கே வழிமறித்திருந்துடன் ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து பேருந்துக்களை அகற்றினர். 

எனினும் தமக்கான எரிபொருள் கிடைக்கப்பெறும் வரை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்து தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதே வேளை ஏறாவூர் பிரதேச செயலாளர், செங்கலடி பிரதேச செயலாளர், பொலிஸார் ஆகியோருக்கும் போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்துச் சாலையில் இடம்பெற்றது. 

இதன்போது பிரதேச செயலாளர்கள் இன்றய தினம் எரிபொருள் வழங்குவதாக வாக்குறித்தியளித்தனர்.

இன்றைய தினத்தினுள் எரிபொருள் வழங்கினால் மாத்திரம் தாம் தமது பணிப்பகிஸ்கரிப்பை கைவிடுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 

இதேவைளை இது வரை தொடர்ந்தும் தொடர் பணிபபகிஸ்கரிப்பு இடம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :