போராட்டம் என்ற போர்வையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவது ஜனநாயகம் அல்ல.-ஜனாதிபதி ரணில்



ஆர்.சனத்-

போராட்டம் என்ற போர்வையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முற்படுவது ஜனநாயகம் அல்ல
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
'சிஸ்டம் சேஞ்'சை ஏற்படுத்த தயார்
நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்லன்
பிரதமர் நியமனம் எனது கைகளில் இல்லை

" போராட்டம் என்ற போர்வையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றுவதும் ஜனநாயகம் கிடையாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு கங்காராமை விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
விகாரை வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் நடப்பு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் கேள்விகள் எழுப்பட்டன. அவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அவ்வாறு கூறினார்.
" எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் ராஜபக்சக்களுக்கு எதிராகவே செயற்பட்டுள்ளேன். எனவே, அவர்கள் எப்படி எனது நண்பர்களாவார்கள்? நான் மக்களின் நண்பன்." -எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசியல் முறைமையை மாற்றி, அனைத்துக்கட்சிகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படவே எதிர்பார்க்கின்றேன், இளைஞர்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது, எதிர்ப்பு அரசியலை நடத்தினால் அது நாட்டுக்குதான் தீங்காக அமையும்.
அதேவேளை, தற்போதைய முறைமைக்கு (சிஸ்டம்) எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எல்லா துறைகளிலும் மாற்றம் கோரப்படுகின்றது. அமைதியாக போராடுபவர்களுக்கு, அதற்கான பரப்புரைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். மௌனமாக இருப்பவர்களின் யோசனைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்.
எனினும், போராட்டம் என்ற போர்வையில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும், வீடுகளை எரிப்பதற்கும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றை கைப்பற்றுவது ஜனநாயகம் அல்ல. அது சட்டவிரோத நடவடிக்கை. அவ்வாறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை பெற்றவரைதான் பிரதமராக தெரிவுசெய்ய வேண்டும். எனது கட்சியில் நான் மட்டுமே உள்ளேன். இது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :