ஓட்டமாவடி - ஒட்டுவெளியில் யானை தாக்கி 65 வயது நபர் மரணம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
யல் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - ஒட்டுவெளி எனும் வயல் பகுதியில் வைத்தே இந்த சம்பவம் நேற்றிரவு (8) 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேளாண்மை அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்த போது வயல் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த நான்கு யானைகளை குறித்த நபர் விரட்டிய போது அதில் ஒரு யானை தாக்கியுள்ளது.

இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யானை தாக்குதலில் உயிரிழந்த நபர் ஓட்டமாவடி - 3 ஆம் வட்டாரம் பரிகாரியார் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய முகம்மது முகைதீன் அகமது லெப்பை என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :