சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு அமைவாக பத்தாண்டு தேசியத் திட்டத்தின் முன்வைப்புக்கு அமைவாக அம்பாறை மாவட்டத் திட்டத்தை முன்வைக்கும் நிகழ்வு அண்மையில் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், வசிக்கும் பகுதிகளுக்கேற்ப மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 10 ஆண்டுகள் , 2021 முதல் 2030 வரையிலான நீண்ட கால திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையாலும் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 2030ஆம் ஆண்டளவில் அனைத்து இலங்கையர்களுக்கும் கழிவறை வசதிகளை வழங்குவதே முன்னுரிமையாகும். தற்போது 2% இலங்கையர்களுக்கு கழிவறை வசதி இல்லை.
அதற்கமைவாக அம்பாறை மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாத மக்களுக்கு மலசலகூடங்களை வழங்குவது மற்றும் மலசலகூட தொட்டிகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம் வலுவான பங்கை வகிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் வலியுறுத்தினார். இதற்கான உதவிகளை பிரதேச செயலாளர்கள் வழங்குவார்கள் .
பத்து (10) வருட கால திட்டம். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு முன்னேற வேண்டிய திட்டம். பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம் மற்றும் அதற்கான முறைகள் குறித்து சரியான கவனம் செலுத்தப்பட வேண்டும். "
இந்நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பொது அத்தியட்சகர் பொறியியலாளர். சுதேசன், அம்பாறை பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் . டி. பெரேரா, பொறியியலாளர். சேவராஜ், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் .கே.பாக்யராஜா உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment