அம்பாறை மாவட்ட செயலக முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் ஸ்ரீயானி பத்மலதாவின் பிரியாவிடை நிகழ்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் ஸ்ரீயானி பத்மலதா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேடபோர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டச் செயலாளர். ஜெகதீசன், மாவட்ட உதவிச் செயலாளர் விமான்சா செனவிரத்ன, பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் பாக்யராஜா, பிரதம பொறியியலாளர், வடிவமைப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள் உட்பட மாவட்டச் செயலகத்தின் அனைத்து அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :