மருதமுனையின் முதல் பெண் நிருவாக சேவை அதிகாரி அய்மா நிஃமத்துல்லா உதவிப் பிரதேச செயலாளராக நியமனம்.



பி.எம்.எம்.ஏ.காதர்-
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த அய்மா நிஃமத்துல்லா கடந்த ஆறு மாதங்கள் கொழும்பு,திருகோணமலை.அம்பாறை,கல்முனை ஆகிய இடங்களில் பயிற்சியை நிறைவு செய்தபின்னர்.மஹாஓய பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2022-02-11ஆம் திகதி பிரதேச செயலாளர் திலின விக்கிரமரத்தன முன்னிலையில் தனது கடமையைப் பொறுப்பெற்றார்.தெரிவு செய்யப்ட்டவர்களுக்கான நியமனக்கடிதங்கள் கடந்த 2022-02-08ஆம் திகதி உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஸமல் ராஜபக்ஸவினால் வழங்கி வைக்கப்பட்டது.இவர் மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தின் ஸ்தாப அதிபர் கவிஞர் ஏ.ஆர் நிஃமத்துல்லா(அறநிலா),ஆசிரியை ஏ.ஜி.உம்மு பத்தீலா தம்பதியின் மூத்த புதல்வியும்,சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அவர்களின் மனைவியுமாவார்



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :