கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஏறாவூரில் மிகத்தீவிரம்



ஏறாவூர் நிருபர் -நாஸர்-
கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஏறாவூரில் மிகத்தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஏறாவூர்ப்;பிரதேசத்தில் இதுவரை சுமார் அறுபதாயிரம்பேர் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம் தலைமையில் நடைபெற்றுவரும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின்போது இதுவரை சினோபாம் முதலாம் டோஸ் 23 ஆயிரம் பேருக்கும் இரண்டாம் டோஸ் 21 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஏறாவூரில் 11 ஆயிரத்து ஐந்நூறுபேர் பூஸ்டர் தடுப்புசியைப்பெற்றுள்ளனர்.

இதேவேளை இங்கு சுமார் ஐயாயிரம் பேர் பைஸர் தடுப்பூசி பெற்றுள்ளதாக பிரதேச சுகாதார வைத்தியதிகாரி சாபிறா வசிம் குறிப்பிட்டார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் கட்டாயத்தை வலிறுத்தி ஏறாவூர்ப் பிரதேசத்தில் பொது இடங்களில் அடிக்கடி ஒலிபெருக்கிகள்மூலமாக அறிவிப்புச்செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :