போலிச்செய்தி வெளியிட்டதாக கூறி தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை பல பிரதேசங்களிலும் எரித்து "கிழக்கின் கேடயம்" அமைப்பினர் எதிர்ப்பை வெளியிட்டனர்.



நூருல் ஹுதா உமர்-
தொடர்ந்தும் ஊடக மதிப்பை கெடுத்துக்கொண்டு பொய்யான செய்திகளை வெளியிட்டுவருவாதாக  தெரிவித்து தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை எரித்து பல பிரதேசங்களிலும் "கிழக்கின் கேடயம்" அமைப்பினர் தனது எதிர்ப்பை வெளியிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
 
இதுவிடயம் தொடர்பில் தெரியவருவதாவது, திருகோணமலை பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைக்கு நடந்த அநீதியை முற்றாக மறைத்து தாக்கியவரை அப்பாவி போன்றும், தாக்கப்பட்டவரை தாக்கியவராகவும் செய்தி வெளியிட்டதுடன் நடக்காத பல சம்பவங்களை நடந்ததாக பொய்யான செய்திகளை வெளியிட்டிருந்ததாக கூறியே தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை "கிழக்கின் கேடயம்" அமைப்பினர் எரித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
 
சமூகவலைத்தளங்களிலும், முஸ்லிம் சமூகத்தாரிடமும் பலத்த கண்டனங்களை பெற்றுவரும் தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகள் தொடர்ந்தும் போலியான பக்கசார்பான செய்திகளை வெளியிட கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களின் பக்க நியாயத்தை கேட்காமல் செய்தியை பிரசுரித்த பத்திரிகைகள் தமது தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் "கிழக்கின் கேடயம்" அமைப்பினர் இதன்போது காணொளியூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :