தமிழர்திருநாளாம் தித்திக்கும் தீபாவளிப்பண்டிகையையொட்டி வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலய சிறப்பு பூஜைவழிபாட்டின்போது லண்டனில்இருந்துவந்த காரைதீவு தம்பதியினரால் பரிசுஒன்று கிடைக்கப்பெற்றது.
நீண்டகாலத்திற்குப்பிறகு புதிய தலைவரின் வருகையைத்தொடர்ந்து ஆலய புனருத்தாபனப்பணிகள் தினம்தினம் இடம்பெற்றுவருகின்றமையை அவதானித்த அவர்கள் அம்மனுக்காக முதற்கட்டமாக 50ஆயிரம் ருபாவை வழங்கினர்.
லண்டனிலிருந்துவந்த காரைதீவைச்சேர்ந்த அகிலன் சுஜீவா தம்பதியினர் இப்பரிசை ஆலயத்தின் புதிய தலைவர் கி.ஜெயசிறில் ,செயலாளர் த.சண்முகநாதன், ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரிடம் வழங்கினர்.
ஆலயவளாகத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள புதிய மீனாட்சிஅம்மனாலயத்தின் மகாகும்பாபிசேகத்தையொட்டி திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமகாலத்தில் இவர்களது விஜயம் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment