தீபாவளி தினத்தில் மீனாட்சிஅம்மனுக்கு கிடைத்த பரிசு



வி.ரி.சகாதேவராஜா-
மிழர்திருநாளாம் தித்திக்கும் தீபாவளிப்பண்டிகையையொட்டி வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலய சிறப்பு பூஜைவழிபாட்டின்போது லண்டனில்இருந்துவந்த காரைதீவு தம்பதியினரால் பரிசுஒன்று கிடைக்கப்பெற்றது.

நீண்டகாலத்திற்குப்பிறகு புதிய தலைவரின் வருகையைத்தொடர்ந்து ஆலய புனருத்தாபனப்பணிகள் தினம்தினம் இடம்பெற்றுவருகின்றமையை அவதானித்த அவர்கள் அம்மனுக்காக முதற்கட்டமாக 50ஆயிரம் ருபாவை வழங்கினர்.

லண்டனிலிருந்துவந்த காரைதீவைச்சேர்ந்த அகிலன் சுஜீவா தம்பதியினர் இப்பரிசை ஆலயத்தின் புதிய தலைவர் கி.ஜெயசிறில் ,செயலாளர் த.சண்முகநாதன், ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரிடம் வழங்கினர்.

ஆலயவளாகத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள புதிய மீனாட்சிஅம்மனாலயத்தின் மகாகும்பாபிசேகத்தையொட்டி திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமகாலத்தில் இவர்களது விஜயம் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :