23வது கொடகே தேசிய சாகித்திய விருது-2021



2020ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நூல்களில் தெரிவுக்கு வந்த நூல்களின் தெரிவு முடிவுகள்.

2020ஆம் ஆண்டு வெளிவந்து தெரிவுக்கு வந்த நாவல்களில் சிறந்த நாவலாக ஒன்றும் தெரிவுச் செய்யப்படவில்லை.

2020ஆண்டு வெளிவந்து ,தெரிவுக்கு வந்த சிறுகதைத் தொகுப்புகளில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளில் சிறந்த சிறுகதைத் தொகுப்பாக மல்லிகை சி.குமாரின் “ வேடத்தனம் ‘ தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.

2020ஆண்டு வெளிவந்து ,தெரிவுக்கு வந்த கவிதைத் தொகுப்புகளில் 2020ஆம் ஆண்டு வெளிவந்த கவிதைத் தொகுப்பு தொகுப்புகளில் சிறந்த கவிதைத் தொகுப்பாக வெலிமடை ரபீக்கின் “ ஒரு நானும் இன்னும் ஒரு நானும் ‘ தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு சிங்களத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நாவலாக எம்.ரிஷான் ஷரீப்பின் மொழிபெயர்ப்பில் வெளி வந்திருக்கும் கத்யானா அமரசிங்ஹ வின் தரணி0- எனும் நாவல் தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.

2020ஆண்டு வெளிவந்து ,தெரிவுக்கு வந்த நூல்களில் முதல் நூல் வெளியிட்ட இளம் படைப்பாளியின் நூலுக்கான விருது ஆ.லெ.மு.இர்ஷாத்தின் ஒளி பூக்கும் இரவு எனும் ஹைக்கூ தொகுதி தெரிவுச் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :