புதிய நேர அட்டவணைக்கு அமைவாக ரயில் சேவைகள்



மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் விசேட நேர அட்டவணைக்கு அமைவாகவே ரயில்; சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான திகதி இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும், போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய ரயில் சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து, அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோரின் தலைமையில், நேற்று (11) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் இதனை கூறினார்.

மேலும், விசேட நேர அட்டவணைக்கு அமைவாக, 130 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. நெருக்கடியின்றி பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு புதிதாக பல கடுகதி ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.

அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் 3300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளதாகவும், ரயில் பயணிகளின் வசதி கருதி விசேட பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை, போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. எனவே, போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :