மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 27 பாடசாலைகள் மீளஆரம்பிக்கப்பட்டன.



ஏறாவூர் நிருபர் நாஸர்-
ப்பாடசாலைகளுக்கு கனிசமான அளவு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் சமுகமளித்திருந்ததாக வலயக் கல்விப்பணிமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பாடசாலைகளின் ஆரம்ப பணிகளை மேற்பார்வை செய்வதற்கென வலயக் கல்விப்பணிமனையின் அதிகாரிகள் தரிசிப்புச் செய்திருந்தனர்.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பல மாதகாலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள திறக்கப்பட்டபோது அதிகளவிலான மாணவர்கள் சீருடையின்றி நிற ஆடைகளுடன் சமுகமளித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இருநூறு பேருக்கும்; குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட காத்தான்குடி கோட்டத்தின் 12 பாடசாலைகளும் ஏறாவூர்க் கோட்டத்தின் 7 பாடசாலைகளும் மற்றும் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தின் 8 பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுகாதார விதிமுறைகளைப்பின்பற்றி மாணவர்கள் பாடசாலைக்குச் சமுகமளித்திருந்தனர்.
பாடசாலைச் சுற்றாடல் மற்றும் உள்ளக பகுதிகளும் பெற்றார் மற்றும் பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் சிரமதானப்பணி மூலம் சுத்தம் செய்யப்பட்டு தளபாடங்கள் கிருமி தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :