தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்!



நாட்டின் அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொவிட்-19 ஒழிப்பு செயலணியின் பரிந்துரைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ள்து.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார வழிகாட்டுதல்கள் கிடைத்தவுடன் உடனடியாக தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :