கனடா நிராகரித்த சுமங்கலவை இத்தாலியும் ஏற்க மறுப்பு?



J.f.காமிலா பேகம்-
முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், இத்தாலிக்கான இலங்கைத் தூதவராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், இத்தாலி அதற்கான எந்தவித பதிலையும் கடந்த 05 மாதங்களாக பதிலளிக்கவில்லை.

இதற்கு முன்னர் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்ட போதிலும் போர்க் குற்றச்சாட்டு உள்ளதால் கனேடிய அரசாங்கம் அவரை ஏற்க மறுத்துவிட்டது.

தொடர்ந்து அவர் கடந்த ஏப்ரலில் இத்தாலிக்கான தூதவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த நியமனம் குறித்து இத்தாலி அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :