கொரோனா சேவையில் மாத்தளை மாநகரசபை முன்மாதிரி!
மாத்தளை மாநகரசபையின் முதலாவது தமிழ்மேயர் சந்தனம் பிரகாஷ்.
கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதால் வசதி இல்லாமலுள்ளது. அதை உணர்ந்தே இதிலும் எமது நிவாரணத்தை வழங்கவேண்டும் என்ற மனிதாபிமான நோக்கொடு நாம் இவ் இலவச தகனக்கிரியை ஏற்பாட்டை செய்துவருகின்றோம்.
இவ்வாறு கூறுகிறார் மாத்தளை மாநகரசபையின் முதலாவது தமிழ்மேயர் சந்தனம் பிரகாஷ் அவர்கள்.இலங்கையில் 341 உள்ளுராட்சிமன்றங்கள் உள்ளன. அவற்றில் 24மாநகரசபைகளும் ,41நகரசபைகளும் ,276 பிரதேசசபைகளும் இயங்குகின்றன.
இந்த 24 மாநகரசபைகளில் மூவினம்சார்ந்தவர்களும் முதல்வர்களாக அதாவது மேயர்களாகவுள்ளனர். ஆனால் இவர்களில் ஆக மூன்றே மூன்று மேயர்கள் தமிழர்களாகவுள்ளனர். கிழக்கில் மட்டு.மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன் .வடக்கில் யாழ்.மாநகரசபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன். மாத்தளை மாநகரசபையில் மேயர் சந்தனம் பிரகாஷ்.
ஆக வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள ஒரேயொரு தமிழ் மேயர் சந்தனம் பிரகாஷ் மட்டுமே என்பது வெள்ளிடைமலை.
மாத்தளை மாநகரசபையில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 3 தமிழ் உறுப்பினர்கள் , 5முஸ்லிம் உறுப்பினர்கள் ,13 சிங்கள உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்தநிலையில் தமிழ் பிரமுகர் ஒருவர் முதல்வராக அதாவது மேயராக இருப்பதென்பது போற்றுதற்குரியது பெருமைக்குரியது.
அவரை அண்மையில் முதன்முதலாக கிழக்குமாகாணத்திற்கு விஜயம்செய்தபோது வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்திற்கும் விஜயம்செய்திருந்தார். அங்கு அவரிடம் பெற்ற நேர்காணலை இங்கு வாசகர்களுக்காக தருகிறோம்.
கேள்வி: தாங்கள் எந்த கட்சியைச் சார்ந்தவர்? தங்களது அரசியலுக்குள் ஈர்த்த அரசியல்ஆசான் யார்?
பதில்: நான் கௌரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்தவன். எமது கட்சியின் அரசியல் தலைவர்கள் குறிப்பாக மத்தியமாகாணசபை உறுப்பினர் முத்துசாமி சிவஞானம் அவர்களே என்னை அரசியலுக்குள் வரவைத்தவர் ,ஈர்த்தவர். அவர்தான் எனது அரசியல்ஆசான்.என்னை அரசியலுக்குள் ஈர்த்தவர் அவர்தான்.
கேள்வி: மாத்தளை நகரசபையில் தங்களது அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்திருந்தது?
பதில்: நான் 2002ஆம் ஆண்டு மாத்தளை மாநகரசபையில் ஓர் உறுப்பினராக அரசியலில் பிரவேசித்தேன். 2018இல் உதவி மேயராகவும் 26 ஆகஸ்ட் 2020இல் பதில் மேயராகவும், 2021 ஜனவரி 6ஆம் திகதி முதல் நிரந்தர மேயராகவும் சேவையாற்றி வருகிறேன்.
2002 இலிருந்து 4முறை உறுப்பினராகத்தெரிவானேன். இறுதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜ.ம.சுமுன்னணி சார்பில் தெரிவானேன்.
2002தேர்தலில் ஜ.தே.கட்சி சார்பிலும் பின்னர் 2006 2011 2018 களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் தெரிவானேன்.
கேள்வி: மாத்தளைமாநகரின் சமுககட்டமைப்பு பற்றிக்கூறுங்கள்?
பதில்: மாத்தளையில் 50வீதம் பெரும்பான்மையின சிங்கள சமுகத்தினரும் ,மீதி 50வீதம் சரிக்குச்சமமாக தலா 25வீதம் தமிழ் மற்றும் முஸ்லிம் சமுகத்தினர் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். முன்னுதாரண நகரமாக எமது மாத்தளை மாகரசபை திகழ்கிறது.
கேள்வி: மாநகரசபையில் எத்தனை உறுப்பினர்கள்?
பதில், எமது சபையில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 3 தமிழ் உறுப்பினர்கள் , 5முஸ்லிம் உறுப்பினர்கள் ,13 சிங்கள உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
கேள்வி: அப்படியெனின் வெறும் 3 தமிழ் உறுப்பினர்கள் உள்ள சபையில் மேயராக சாத்தியமானது எப்படி?
பதில்: இது நல்ல கேள்வி. 2018ஏப்ரல் 20ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் மேயராக ஜ.தே.கட்சியைச்சேர்ந்த ஒரு பெரும்பான்மையினத்தவர்(அலுவிகாரை)தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.தெரிவாகி குறுகியகாலத்திலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது முன்வைக்கப்பட்டன. மேலும் நிருவாகக்குழறுபடிகள் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் மத்திய மாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
ஆளுநர் இதனை அரசின் கவனத்திற்கொண்டுவந்ததன் பிரகாரம் விசேட விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டு மேயரது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணைசெய்யப்பட்டது. முடிவாக அவரது ஊழல் குற்றசாட்டுகள் நிருபணமானது. அதன்காரணமாக அவர் மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
விசாரணைக்காலம் 3மாதகாலமாக நீடித்தது. அந்தக்காலத்திலேயே நான் பதில் மேயராக கடமையாற்றினேன்.
அவரைவிலக்கியதன் பின்பு புதிய மேயரை தெரிவுசெய்வதற்காக கூட்டப்பட்ட விசேட அமர்வில் அனைத்து உறுப்பினர்களினதும் பேராதரவுடன் நான் 2021 ஜனவரி 6ஆம் திகதி மேயராகத் தெரிவானேன்.
மக்களுடைய தேவைகளை இனங்கண்டு சட்டரீதியாக எமது அதிகாரத்தின்படி சேவையாற்றிவருகிறேன்.
கேள்வி: அவரை விலக்கியதில் உங்களது பங்களிப்பு இருந்ததா?
பதில்: நிச்சயமாக..-2018இல் நடைபெற்றதேர்தலில் முதல்வரைத் தெரிவுசெய்வதில் எனது வகிபாகம் கூடுதலாகவிருந்துது. அலிக்அலிவிகாரையின் புதல்வாரன அலிவிகாரையை முதல்வராக்கினேன். நான் உப முதல்வரானேன்.
எனினும் அவர்மீது சுமத்தப்பட்ட ஊழல்குற்றச்சாட்டுகளையிட்டு நான் வாய்மூடி மௌனியாகவிருக்கமுடியவில்லை. நான் தெரிவுசெய்த ஒருவர் இவ்வாறு குற்றமிழைக்கிறார் என்று பொங்கியெழுந்து அவருக்கெதிராக முதலாவது குரல் எழுப்பிய நபர் நானே. அதாவது நானே அவருக்கெதிரான முழுச்செயற்பாட்டிலும் ஈடுபட்டேன்.
மாத்தளையில் அதிகாரம் படைத்த பணபலம் படைத்த வரலாறு படைத்த பெரியகுடும்பத்தின் வாரிசு அவர். எனினும் முதல்வராக வந்தபின்னர் அவர் செய்த ஊழல்குற்றச்சாட்டுகளை அங்கீகரிக்க எனது மனச்சாட்சி இடம்கொடுக்கவில்லை. அவருக்கெதிராக செயற்பட்டபோது எமது சபையின் ஏனைய சிங்கள முஸ்லிம் தமிழ் உறுப்பினர்களின் பேராதரவு ஒத்துழைப்பு எனக்குக்கிடைத்தது. அவர்களுக்கு நம்பிக்கையுள்ள நபராக நான் மாறினேன்.
அதனால் அவர்களாகவே முன்வந்து எனது பெயரை முன்மொழிந்து வழிமொழிந்து முதல்வராக்கினார்கள்.
கேள்வி: செல்வாக்குள் அதுவும் பெரும்பான்மையினர் வாழுகின்ற பெரும்பான்மையின பிரமுகரை வீழ்த்துமளவிற்கு தங்கள் பின்புலம் எவ்வாறு அமைந்திருந்தது?
பதில்: நான் சாதாரணகுடும்பத்தில் பிறந்தவன். மாத்தளை இந்து தேசியக்கல்லூரியில் உயர்தரம்வரை கல்விகற்றவன். கல்விகற்கும்போதே சமுகசேவையிலும் ஈடுபட்டவன். றத்தோட்டை இந்துக்கல்லூரியில் சிலகாலம் தொண்டராசிரியராக 1996-98பணியாற்றியவன்.
அகிலஇலங்கை ரீதியில் உதைபந்தாட்டதுறையில் தெரிவுசெயயப்பட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் கையில் விருது பெற்றேன். உள்ளுராட்சிசபையில் உதவிநூலகராகவும் பணியாற்றினேன்.உள்ளுராட்சி முறைமையில் டிப்ளோமாப்பட்டம் பெற்றவர் அதுமட்டுமல்ல் 4தடவைகள் மாநகரசபையிலிருந்து அனுபவம் பெற்றவர் சகலரதும் நன்மதிப்பைப்பெற்றவர் பொருத்தமானவர் என்ற அடிப்படையில் என்னை தெரிந்தார்கள்.
கேள்வி: மாத்தளை மாகரசபை வரலாற்றில் முதலாவது தமிழ் முதல்வர் என்ற பெருமையைப்பெற்றுள்ளீர்கள். அதன் வரலாற்றைச்சொல்லுங்கள்?
அகிலஇலங்கை ரீதியில் உதைபந்தாட்டதுறையில் தெரிவுசெயயப்பட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் கையில் விருது பெற்றேன். உள்ளுராட்சிசபையில் உதவிநூலகராகவும் பணியாற்றினேன்.உள்ளுராட்சி முறைமையில் டிப்ளோமாப்பட்டம் பெற்றவர் அதுமட்டுமல்ல் 4தடவைகள் மாநகரசபையிலிருந்து அனுபவம் பெற்றவர் சகலரதும் நன்மதிப்பைப்பெற்றவர் பொருத்தமானவர் என்ற அடிப்படையில் என்னை தெரிந்தார்கள்.
கேள்வி: மாத்தளை மாகரசபை வரலாற்றில் முதலாவது தமிழ் முதல்வர் என்ற பெருமையைப்பெற்றுள்ளீர்கள். அதன் வரலாற்றைச்சொல்லுங்கள்?
பதில்: மாத்தளை மாநகரசபை வரலாற்றிலே எனக்குமுன்பு சிங்கள முஸ்லிம் அன்பர்களே மேயராகஇருந்துள்ளனர். ஆக முதலாவது தமிழ் மேயர் என்ற பெருமையை கடவுள் எனக்களித்திருந்தார்.அதற்காக இறைவனுக்கும் எனது சக உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் நன்றிகூறுகிறேன்.
மாத்தளை 1947இல் உள்ளுராட்சிமன்றமாக பரிணமித்தபோதிலும் 1970களில் மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டது. இந்த 40வருடகாலத்துள் எந்தவொரு தமிழரும் முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட வரலாறு இல்லை.
1970க்கு முன்பு நகரசபையாகவிருந்தபோது இருபெரும் தமிழ்த்தலைவர்கள் தம்பிராசா ஜயா எதிர்மன்னசிங்கம் ஜயா ஆகியோர் தலைவர்களாக இருந்;துள்ளனர்.
கேள்வி: தங்களின் மக்களுக்கான சேவைகள் எவ்வாறு அமைந்துள்ளன?
பதில்: எனது காலத்தில் மூவினத்திற்கும் சமமாகவே சேவையாற்றிவருகிறேன் . துரதிஸ்வசமாக கொரோனா தாக்கம் வந்தமையினால் பாரிய அபிவிருத்தி என்று செய்யமுடியாத நிலையிருக்கிறது. எனினும் வீதிஅபிவிருத்தி தொடக்கம் தேவையான கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
கேள்வி: இலங்கையில் மாநகரசபையொன்று கொரோனாச் சேவைகளை சிறப்பாக மாத்தளை மாநகரசபை முன்னெடுத்துவருவதாக அறியக்கிடைத்தது. அதுபற்றிக்கூறுங்கள்?
பதில்: எமது சபையால் கொரோனாவுக்கென பல வேலைத்திட்டங்களை செய்துவருகிறோம். கூடுதலான நிதியை கொரோனாச்சேவைக்கு ஒதுக்கி பயன்படுத்திவருகிறோம். உறுப்பினர்களும் ஏகோபித்தமுறையில் தமது பூரண ஆதரவை நல்கிவருவதும் இவ்வெற்றிக்கு காரணமாகும்.
மக்களைப்பாதுகாக்கின்ற சேவையை நாம் எமது சுகாதாரப்பிரிவினரைக்கொண்டு முதன்மைச்செயற்பாடாக இரவுபகலாகச் செய்துவருகின்றோம்.
கேள்வி: முதலாவதாக அம்புலன்ஸ் சேவையின் முக்கியத்துவம் பற்றிக்கூறுங்கள்?
பதில்: மாத்தளை மாநகர எல்லைக்குள் கொவிட் 19 தொற்றுக்குள்ளான தொற்றாளர்களை அவசர நிலைமைகளின் போது சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்வதற்கு வாகன வசதியின்மையால் அசௌகரியத்துக்கு உள்ளாகிவந்தனர்.
இதற்கு தீர்வுகாணுமுகமாக எமது சபையினால் இவ்விலவச வாகனசேவையை ஏற்படுத்தியுள்ளோம். இதற்கென ஆளணியினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக உதவி கரம் நீட்டுவதற்காக 24 மணித்தியால இலவச வாகன சேவையை வழங்குவதற்கு கடந்த 24ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர தேவைக்கு (Hotline) 0710227227 க்கு தொடர்பு கொள்ளலாம்.
இச்சேவையையிட்டு மக்கள் மிகுந்த பாராட்டைத் தெரிவித்துவருகின்றனர்.
தற்காலத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகினால் உறவுகள் ஏனையோர் ஒதுக்கிவருவதைக்காணக்கூடியதாயிருந்தது. அவரவர் பாதுகாப்பே அதற்கு காரணம். தொற்றின் வேகம் நோயின் அகோரம் என்பனவே அதற்கு காணரங்கள்.
நோய்வாய்ப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்குகொண்டுபோக வாகன உரிமையாளர்கள் தவிர்த்துவந்தார்கள். ஆதலால்தான் தனியான சேவையை செய்ய முன்வந்தோம். கைகொடுத்து உதவவேண்டும்.
கேள்வி: இது சுகாதாரத்துறையின் கடமையல்லவா? எவ்வாறு அது சாத்தியமானது?
பதில்: ஆம். எமது சபையிலும் சுகாதாரப்பரிவு உள்ளது. அவர்களின் துணையோடுதான் இம்மக்கள்சேவையை செய்துவருகின்றோம்.பொசிட்டிவ் கருத்ப்பட்டவர்களை எமது அம்புலன்சிஸ் பிஎச்ஜ சகிதம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்வது மட்டுமல்ல அவரோடிருந்த ஏனைய குடும்ப உறுப்பினர்களுகளை தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான மருந்துகளை எமது சபையிலுள்ள மற்றொரு குழுவினர் வழங்குவார்கள்.
கேள்வி: கொவிட் நபர் சார்ந்த குடும்பங்களுக்கான சேவைகள் என்னென்ன மேற்கொள்ளப்படுகின்றன?
பதில்: அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உலருணவுப்பொதிகளுக்கு மேலதிகமாக சபைமூலமும் வழங்கிவருகின்றோம். எமது சபைமூலமாக தொகுதி தொகுதியாக பிரித்து அவர்கள்மூலம் இப்பொருட்களை வழங்கிவருகிறோம்.
14நாட்காலத்தில் எம்மைவிட்டால் வேறு யாருமில்லை என்ற மனப்பாங்கில் நாம் அர்ப்பணிப்பான மக்கள்சேவையை முன்னெடுத்துவருகின்றோம். சிலவேளை யாரும் இருக்கலாம் ஆனால் அவர்கள் இன்றைய தொற்றுக்காலத்தில் உதவிசெய்ய முன்வரமாட்டார்கள். எனவேதான மக்கள்சேவைக்கென வந்த நாங்கள் அப்பணியை இந்த இக்கட்டான காலகட்டத்தில் வழங்கிவருகின்றோம்.
கேள்வி: ஏனைய இடங்களில் சுகாதாரத்திணைக்களம் முன்னெடுத்திருக்கின்ற வக்சீன் அதாவது தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நீங்கள் முன்னெடுத்திருப்பதாக அறிகிறோம். அது எவ்வாறு சாத்தியமாயிற்று?
பதில்: மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தையும் பலரும் மெச்சத்தக்கவகையில் சிறப்பாக முன்னெடுத்துவருகி;றோம். அதற்கு எமது வைத்தியஅதிகாரி டாக்டர் அனுசா வெலகெதர உள்ளிட்ட சுகாதாரக்குழுவினர் பரிபூரணமாக ஒத்துழைத்து வருகின்றனர்.மாநகரசபையில் 45ஆயிரமளவில் வாக்காளர்கள். மக்கள்சனத்தொகை 90ஆயிரம்பேரளவில் வாழ்ந்துவருகின்றனர்.
கேள்வி: கொரோனாவால் மரணித்தவர்களின் உடலங்களை தாங்களே பொறுப்பெடுத்து தகனக்கிரியைகளை இலவசமாகச்செய்வதாக கூறப்படுகின்றதே? அதனை விபரியுங்கள்?
கேள்வி: கொரோனாவால் மரணித்தவர்களின் உடலங்களை தாங்களே பொறுப்பெடுத்து தகனக்கிரியைகளை இலவசமாகச்செய்வதாக கூறப்படுகின்றதே? அதனை விபரியுங்கள்?
பதில்:சபையில் ஒரு பிரேரணையைக்கொண்டுவந்து கொரோனாவால் இறக்கின்றவர்களின் உடலங்களை நாமே பொறுப்பெடுத்து இலவசமாக தகனக்கிரியை செய்துவருகின்றோம். இதுவரை சுமார் 150பேர் அளவில் உடல்ங்கள் தகனக்கிரியையை செய்துள்ளோம். ஒருவர் கொரோனாவால் மரணித்தால் அவருக்கு சுமார் 10ஆயிரம் ருபா முதல் 15ஆயிரம் ருபா எமது சபைக்கு வரைசெலவாகின்றது.இருந்தும் மக்களுக்கான உயரிய அந்திமகால சேவையாக இதனைக்கருதுகிறோம்.
கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதால் வசதி இல்லாமலுள்ளது. அதையுணர்ந்தே இதிலும் எமது நிவாரணத்தை வழங்கவேண்டும் என்ற மனிதாபிமான நோக்கொடு நாம் இவ் இலவச தகனக்கிரியை ஏற்பாட்டை செய்துவருகின்றோம்.
கேள்வி: மாநகரசபைக்குட்பட்ட மக்களுக்கு மட்டுமா இந்த இலவச சேவை?
பதில்: நல்ல கேள்வி. உண்மையில் இது எமது மாநகரசபை எல்லைக்குட்பட்டவர்களுக்கு மாத்திரமே என்று ஆரம்பிக்கப்பட்டது. எனினும் எமது எல்லைக்குள் உள்ள மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் கொரோனாவால் மரணிக்கும் அனைவரது உடலங்களையும் அவர் எந்த ஊராக எந்த பிரதேசத்தவராக இருந்தாலும் எந்த இனத்தவராக நாமே முன்னின்று பொறுப்பேற்று அதனை முறைப்படி தகனம்செய்துவருகின்றோம்.
எமது சபையின் அதிகாரவரம்பிற்குட்பட்டவகையில் எமது மநாகரஎல்லைக்குட்பட்ட மக்களுக்கு சேவைசெய்வதே எமது பிரதான இலக்கு. இருந்தபோதிலும் கொரோனாவால் மாத்தளை ஆதாரவைத்தியசாலையில் இறக்கும் மக்களது உடலங்களை சட்டத்திற்குஅப்பால் ஆனால் அதற்குரிய ஆளுநரின் உத்தியோகபூர்வமாக விசேட அனுமதியுடன் செயற்படுத்திவருகின்றோம்.
கேள்வி: தற்போது நீங்கள் எந்தக்கட்சி? அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பதில்: நான் எந்தக்கட்சி சார்ந்தவனுமல்ல. அனைத்து கட்சிக்காரர்களும் இணைந்தே என்னை மேயராக்கியுள்ளனர். எனவே அனைவருக்கும் சேவைசெய்ய கடமைப்பட்டுள்ளேன். அதனையே செய்துவருகின்றேன்.
எமது ஆட்சிக்காலம் அடுத்தவருடம் மார்ச்சில் சட்டரீதியாக நிறைவடைகின்றது. அடுத்ததேர்தலில் போட்டியிடுவதா இல்லையா எந்தக்கட்சியில் போட்டியிடுவது என்பதெல்லாம் நேரம்வரும்போது தெரியவரும்.
பதவியோ தேர்தலோ அதற்கு முதல் மக்கள் உயிரோடு இருக்கவேண்டும் மக்களைக்காபப்hற்றவேண்டும் அதுவே எமது தலையாய நோக்கம்.
கேள்வி: கிழக்கிற்கு முதல்தடவை வந்துள்ளீர்கள். அதுவும் காட்டுக்குள் உள்ள உகந்தமலை முருகளைத்தரிசிக்கவந்த காரணம் என்ன?
பதில்: இது எனது நீண்டநாள் ஆசை. இவ்வாலயத்தைப்பற்றி ஊடகங்கள் வாயிலாக உங்கள் எழுத்துக்களில் பலதடவைகள் வாசித்திருக்கிறேன். வரலாற்றுப்பரசித்திபெற்ற உகந்தைமலை முருகனாயலத்திற்கு வரவேண்டும்.அருளாசிபெறவேண்டும் என்ற ஆசை இருந்தது. கல்முனை மாநகரசபை உறுப்பினர் நண்பர் சந்திரசேகரம் ராஜனின் அன்பான அழைப்பும் இங்குவரக்காரணம். அது இந்த இக்கட்டான காலகட்டத்தில் கிடைத்தமையை ஒரு பாக்கியமாககருதுகின்றேன். கிழக்கின் அன்பான உபசரிப்புக்கு வாழ்த்துக்கள்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
0 comments :
Post a Comment