காரைதீவில் இளவல்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வு



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனைப்பிராந்தியத்துக்குட்பட்ட காரைதீவு சுகாதாரப்பிரிவில் கடந்த இரண்டுதினங்களாக இளவல்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
30 வயது இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலர் இத்தடுப்பூசியைப்பெற ஆர்வம்காட்டினர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர்.தஸ்ஸீமா வசீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ,பொது சுகாதார பரிசோதகர்கள்,குடும்ப நல உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேசசபை நுளம்பு கள தடுப்பு பிரிவினர், நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினர்பாதுகாப்பு படையினர் இணைந்துகொண்டனர்.

கொவிட்-19 தடுப்பூசி இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் 04 நிலையங்களில் நடைபெற்றது.30-60 வயதானவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :