யுனிசெப்பின்னால் சுகாதார ஊழியர்களுக்கு கொரோணா கட்டுப்பாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.



நூருள் ஹுதா உமர், பாரூக் சிஹான், எம்.என்.எம். அப்ராஸ்-
கிழக்கு மாகாணத்தில் பரவலாக அதிகரித்துவரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் யுனிசெப் நிறுவனத்தினால் முன்களப் பணியாளர்களாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான ஒரு தொகை பாதுகாப்பு உபகரணங்கள் இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு இந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முகக்கவசம், முகத்திரை, பி.பி.ஈ. பாதுகாப்பு அங்கிகள், தொற்றுநீக்கி (சனிடைசர்), உட்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை கொண்ட பொதிகளை சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் இதன்போது வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். அப்துல் வாஜித்,
கல்முனை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம் சி மாஹிர் உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :