கல்முனைப்பிராந்தியத்தில் 68வீதமானோருக்கு தடுப்பூசிஏற்றப்பட்டுள்ளது! நாவிதன்வெளி 86%,திருக்கோவில் 84%, ஆலையடிவேம்பு 82% சாதனை.



காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா-
ல்முனைப்பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுகளில் மொத்தமாக 1லட்சத்து 61ஆயிரத்து 44 தடுப்பூசிகளைச் செலுத்தி இதுவரை 67.82%வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் அதிகூடியதாக நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 86.46%தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 10837பேரில் இதுவரை 9370பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84.03% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 15174பேரில் இதுவரை 12752பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 81.08% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 13670பேரில் இதுவரை 11183பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை இறக்காமம் பிரிவில் 79.65% ,காரைதீவுப்பிரிவில் 77.79%, நிந்தவூர்பிரிவில் 72.76 %,பொத்துவில் பிரிவில் 67.46 %,கல்முனை தெற்குப்பிரிவில் 67.16%,அட்டாளைச்சேனைப்பிரிவில் 65.36 %,சாய்ந்தமருதுப்பிரிவில் 65.08% ,அக்கரைப்பற்று பிரிவில் 62.46%, சம்மாந்துறைப்பிரிவில் 57.06%,கல்முனை வடக்குப்பிரிவில் 50.48 % தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

பிராந்தியத்தில் அதிகுறைந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட இடமாக கல்முனைவடக்குப்பிரிவு உள்ளது. அங்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டிய 21198 பேரில் இதுவரை ஆக 10702 பேருக்கே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் இது 50.48 வீதமாகவும் பிராந்திய தடுப்பூசி செலுத்திய அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :