அம்பாறையில் "சௌபாக்கியா" விசேட செயற்திட்ட கலந்துரையாடல் : அரச தரப்பு முக்கியஸ்தர்கள் பலரும் பங்கெடுப்பு !



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்ட விவசாய அபிவிருத்திக்கென அரசினால் இவ்வாண்டில் 3000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னேற்றகரமான விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்தல் மற்றும் சேதன பசளை உற்பத்தி ஊக்குவித்தல் தொடர்பான "சௌபாக்கியா" விசேட செயற்திட்ட கலந்துரையாடல் இன்று [29] அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா , இராஜாங்க அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, சசீந்திர ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினர்களான திலக் ராஜபக்ஸ, டீ.வீரசிங்க மற்றும் அரச உயர் அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்..

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :