சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் - அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

க.கிஷாந்தன்-

லையக சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவற்றை வலியுறுத்தி நாம் போராடுவோம். 

அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - என்று வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் சட்டபூர்வமான அறிவிப்பு இன்னும் தெரியவரவில்லை. தரகர் ஒருவர் ஊடாகவே அச்சிறுமி சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்? இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே இந்த சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரியவரவேண்டும். எமக்கு நீதி அவசியம். எந்தவொரு தகவலும் மூடிமறைக்கப்படக்கூடாது. அதற்காக வீட்டுப்பணிபெண்களுக்காக குரல் கொடுக்கும் எமது சங்கம் போராடும். வீட்டுப்பணிப்பெண்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மலையக பகுதியில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம். இதனால் பெண்கள் இன்று கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது. சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை. பெண்களை வேலைக்க செல்லவேண்டாம் எனக்கூறவில்லை. ஆனால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.” - என்றார் கருப்பையா மைதிலி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :