கோறளைப்பற்று மத்தியில் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றல்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முப்பது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முப்பது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு வாழைச்சேனை பிறைந்துறைச்சேளை அஸ்கர் மகா வித்தியாலயத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று திங்கட்கிழமை ஏற்றப்பட்டது.
கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முப்பது வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கான சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :