முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,
இலங்கையில் 1938ஆம் ஆண்டு காலப் பகுதிலிருந்து மிகவும் பிரபல்யமடையத் தொடங்கிய மஹாராஜா நிறுவனத்தை தலைசிறந்த தொழில் முயற்சியாண்மையாளர் என்ற வகையில், பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு குழுமமாக கட்டியெழுப்பி அதனைப் பலமாக வேரூன்றி வியாபிக்கச் செய்வதில் ராஜா மகேந்திரனின் பங்களிப்பு மகத்தானது.
இலத்திரனியல் ஊடகத்துறையில் கால் பதித்ததிலிருந்து அவர் புகழேணியின் உச்சத்திற்கே சென்றுவிட்டபோதிலும், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாது, இலை மறை காயாக இருந்து கச்சிதமாக நிலைமைகளைக் கையாள்வதில் கிளி மகேந்திரன் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தார்.
ஊடகங்களில் முகம் காட்டுவதையும், பொது வெளியில் காட்சியளிப்பதையும் தவிர்த்துக் கொள்ளும் தனித்துவமான மனப்பக்குவம் அன்னாருக்கு இயல்பிலேயே வாய்த்திருந்தது.
அன்னாரின் மறைவு, கெப்பிடல் மஹாராஜா குழுமத்திற்கும்,எம்ரீவி மற்றும் எம்பீசீ
ஊடகவலையமைப்பின் சிரச,சக்தி,மற்றும் ரீவி 1ஆகியவற்றிற்கும் மட்டுமன்றி, நாட்டில் வாழும் சகல சமூகங்களுக்கும் பேரிழப்பாகும். அவர் இன, மத,மொழி பேதங்களின்றி அனைவருக்கும் உதவினார்.
அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், குழுமத்தினருக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவரது அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment