நபியை இழிவுபடுத்திய ஜெயசிறில் விடயத்தில் அமைதி காக்க கோருகிறது அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம்.



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முகம்மது நபியை இழிவுபடுத்திய விவகாரத்தில் அறிக்கைகளை விடுவதையும், அவருக்கு எதிராகவும், ஏனைய சமூகத்திற்கு எதிராகவும் வன்சொற்களை விடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமூகத்தை சார்ந்த உறவுகளிடம் கேட்டுக்கொள்வதுடன் தீர ஆராய்ந்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் தயாராகி வருவதாக அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (31) கருத்து வெளியிட்ட அவர், முஹம்மது நபியையோ அல்லது இஸ்லாமிய வரலாற்றையோ யாரும் இழிவுபடுத்த விட முடியாது. அப்படி செய்யும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை. நேற்று நிந்தவூரில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை நேற்றே எடுத்துளோம்.

ஆகவே யாரும் இந்த விடயத்தில் அவசரப்பட்டு ஒருவர் விட்ட பிழைக்காக ஏனைய சமூகத்தை சீண்டாமல் தவிர்ந்து இருந்து அமைதி காக்குமாறும் இந்த விடயத்தை தீர ஆராய்ந்து நடந்தவற்றை கொண்டு அடுத்த கட்ட நகர்வை மேலும் செய்ய அம்பாறை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனம் தயாராகி வருவதாகவும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :