நாட்டில் நெருக்கடி நிலை நீங்க பொறுப்புடன் நடந்து கொள்வோம்



தேசிய,சர்வதேச ரீதியில் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் பெருநாளைக்கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் உவகையடைகின்றேன் என டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஷிம் உமர் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,சுகாதார வழிமுறைகளை அனுசரித்து நாம் அனைவரும் நாட்டில் நிலவிவரும் நெருக்கடியான நிலையிலிருந்து அனைத்து இன மக்களும் மீண்டு வருவதற்காகப் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

தியாகத்தின் நினைவை மாத்திரம் இந்தப் பெருநாள் தினத்தில் இரை மீட்டிக் கொள்பவர்களாக இல்லாமல், எங்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்வாதாரத்துக்காக, வறுமையில் சிக்குண்டு சிரமப்படுகின்றவர்களின் நிலைமையையும் சீர்தூக்கிப் பார்த்து அவர்களுக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :