குவைத் அமைப்பின் நிதியுதவியுடன் அந்நூர் சேரிட்டி நிறுவனத்தினால் வீடு கையளிப்பு



நூருல் ஹுதா உமர்-
குவைத் நாட்டின் அல் நஜாத் அமைப்பின் நிதியுதவியுடன் இலங்கை அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் அனுசரனையுடன் மன்முனைபற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கை அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் பிராந்திய இணைப்பாளருமான எம்.ஏ.எம். சியாத்தின் முயற்சியினால் பாலமுனை பிரதேசத்தில் ஏழுபேரை கொண்ட ஒரு குடும்பதிற்காக வீடு ஒன்று முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு அந்த குடும்பத்தினரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டது.

இந் நிகழ்வில் இலங்கை அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எம். அலியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக மன்முனைபற்று பிரதேச சபை தவிசாளர் டீ.ஆர்.தயானந்தன் கலந்து கொண்டார். மேலும் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லிம், அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.எம். சலீம், அந்நூர் சேரிட்டி நிறுவனத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள், கிராம நிலதாரி, மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :