14ஆம் திகதிவரை பயணத்தடை நீடிப்பா? கண்டிப்பான முடிவு எடுக்கப்படும்?



J.f.காமிலா பேகம்-
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மறுத்துள்ளார்.

அத்துடன், அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் அரசாங்கத்தினால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கம் பயணத் தடையை நீடிக்க தீர்மானித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பயணத்தடை தளர்த்தியபோது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டார். கண்டிப்பான முடிவு வரும் நாட்களில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் தற்போது பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக கடந்த 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதுடன், அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :