நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான சூழல் உருவாகவில்லை என்று ஆளுங்கட்சித் தலைவர்கள் சந்திப்பில் பேச்சு நடத்தப்பட்டிருக்கின்றது.
அதன்படி மாகாண சபைகளுக்கான தேர்தலை இப்போதைக்கு நடத்தாமலிருக்கும் இணக்கப்பாடும் எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்த ஆளுங்கட்சித் தலைவர்களுக்கான சந்திப்பில் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை பிரதமர் சார்பில் முன்வைக்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷ முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment