இராஜினாமா செய்ய பவித்ரா தீவிர ஆலோசனை?



J.f.காமிலா பேகம்-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மிகுந்த சங்கடத்தில் இருப்பதாக அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குறிப்பாக கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த அமைச்சரால் எடுக்கப்படுகின்ற சில முக்கியமான தீர்மானங்கள் அரச உயர்பீடத்தினால் நிராகரிக்கப்படுகின்றதாக சொல்லப்படுகிறது.

அதன் காரணமாக கொரோனா தொற்று ஒழிப்பு விடயத்தில் சுகாதார அமைச்சராக தாம் தோல்வியை சந்தித்து வருவாகவும், அதனால் தனது மாவட்டத்திலும் தனது வாக்குவங்கிகூட சரியும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலைமை இப்படியே தொடருமாக இருந்தால் அமைச்சுப் பதவியையும் இராஜினாமா செய்யப் போவதாகவே அவர் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :