வீட்டை விட்டு வெளியேறும் நபர்களின் தேசிய அடையாள அட்டையை சோதனை செய்யும் வாழைச்சேனை பொலிஸார்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ன்று (17) முதல் 31ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அத்தியவசிய தேவைக்காக வீட்டிலிருந்து ஏனைய நேரங்களில் வெளியேறும் நபர்களின் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தினை பாதுகாப்புப் படையினர் சோதனையிடும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டிலிருந்து வீதிக்கு வரும் நபர்களின் தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தை சரிபார்க்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுனவின் வழிகாட்டலில் பொலிஸார் இன்று (17) காலை முதல் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :