தொடர்ந்தும் வெறிச்சோடிக் காணப்படும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு; உள் வீதிகளிலும் பொலிஸார் கண்காணிப்பு!



எச்.எம்.எம்.பர்ஸான்-
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணி முதல் நாடுபூராவும் பயணத் தடையை அமுல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பயணத் தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை, காவத்தமுனை ஆகிய பிரதேசங்கள் சனநடமாட்டமின்றி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறித்த பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு, உள் வீதிகளில் அநாவசியமாக நடமாடும் நபர்களை கட்டுப்படுத்தியும் வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :