நாவிதன்வெளியில் பீ.சீ.ஆர் பரிசோதனை



எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று மூன்றாம் அலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பானவர்களுக்கும் , கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குள் வருகை தந்தவர்களுக்கும் இன்று வியாழக்கிழமை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேசத்தில் கொரோனா மூன்றாம் அலையில் 04பேர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .அதன்காரணமாக நாவிதன்வெளி - 01 , அன்னமலை - 01 , மத்திய முகாம் - 01 மத்தியமுகாம - 06 ஆகிய கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் 45 நபர்களுக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் வீ.வினோதினி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எச்.எம்.ஜாபீர் . ஏ.எம்.றம்ஸீன், பற்சிகிச்சையாளர் எல்.ஜெஸ்மின் நகார் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் வீடு வீடாக பீ.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொண்டனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :