வை.டபிள்யு.எம்.ஏ. ஏற்பாட்டில் புனித ரமழானை முன்னிட்டு ஸகாத் உலர் உணவுப் பொதிகள்



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் (வை.டபிள்யு.எம்.ஏ) ஏற்பாட்டில் புனித ரமழானை முன்னிட்டு இலங்கைக்கான மலேசிய தூதுவரலாயத்தின் அனுசரனையில் விதவைகள் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு ஸகாத் நிதியத்தின் மூலம் ஸகாத் உலர் உணவுப் பொதிகள் தெமடகொட வை.எம்.எம்.ஏ தலைமைக் காரியாலயத்தில் வைத்து நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
வை.டபிள்.யு.எம்.ஏயின் தலைவர் தேசமான்ய பவாஸா தாஹா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய தூதுவரலாயத்தின் தூதுவர் டன்யாங் தாய் மற்றும் அவரது துணைவியும்; கலந்து கொண்டு உணவுப் பொதிகளை இளம் மாதர் முஸ்லிம் அமைப்பிடம் வழங்கி வைத்தனர். இவ்வாறு கிடைக்கப்பெற்ற பொருட்களை நேற்று அமைப்பின் மூலம் உரியவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன். இதன்போது அமைப்பின் ஆலோசகர் காலித் பாறுக்கும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :