இன்று கோமாரியில் எரிவாயுசிலிண்டர்வாகனம் தடம்புரண்டுவிபத்து!



வி.ரி.சகாதேவராஜா-
கோமாரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எரிவாயுசிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் தடம்புரண்டு சேதத்திற்குள்ளானது.

இச்சம்பவம்இன்று(9)ஞாயிற்றுக்கிழமை காலை 10.40மணியளவில் கோமாரி பாலத்தில் இடம்பெற்றுள்ளது..

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தின் ரயர் பாலத்தடியில்வைத்து வெடித்தகாரணத்தினால் வாகனம் தடம்புரண்டு இவ்விபத்து இடம்பெற்றதாகக்கூறப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க சாரதி திடீர் பிரேக் போட்டதும் பாலத்தினுள் விழாமல் காப்பாற்றப்பட்டது. எனினும் சிலிண்டர்கள் வீதியில் வீழ்ந்து சிதறின. அதிஸ்டவசமாக எதுவும் வெடிக்கவில்லை அத்துடன் சாரதிக்கோ உதவியாளருக்கோ எவ்வித பாதிப்புமில்லை என நேரில் கண்ட பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் தெரிவித்தார்.

வீதியால் அப்போது வாகம் குறைவு என்பதால் ஏனைய வாகனங்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை. எனினும் சிறிதுநேரலம் பொத்துவிலுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
பொத்துவில் பொலிசார் நேரடியாக ஸ்தலத்திற்குவிரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :