பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டா



அரசாங்க தகவல் திணைக்களம்-
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையைக்; கருத்திற்கொண்டு அனைத்துப் பாடசாலைகள், முன்பள்ளிகள், அறநெறிப் பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் அரசாங்கம் பெருமளிவல் ஆர்வங்கொண்டிருந்த  போதிலும் மாணவர்களின் சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில், பாடசாலை ஆரம்பிக்கப்படும் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :