நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையைக்; கருத்திற்கொண்டு அனைத்துப் பாடசாலைகள், முன்பள்ளிகள், அறநெறிப் பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் அரசாங்கம் பெருமளிவல் ஆர்வங்கொண்டிருந்த போதிலும் மாணவர்களின் சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில், பாடசாலை ஆரம்பிக்கப்படும் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.
0 comments :
Post a Comment