வேகக்கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து; இருவர் பலி; வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சம்பவம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கார் விபத்தொன்றில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியாங்குளம் பகுதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் நேற்றிரவு (6) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் குறித்த பகுதியால் செல்லும் போது அதிவேகமாக பயணித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ் விபத்தில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய தனியார் பஸ் உரிமையாளரும் மற்றும் அவருடன் பயணித்த 30 வயதுடைய பெண் ஒருவருமே பலியாகியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :