உணவுக்காக கூரையை உடைத்து காட்டுயானை அட்டகாசம்! செல்வபுரத்தில் சம்பவம் : மரவள்ளிக்காலை சேதம்.



வி.ரி.சகாதேவராஜா-
ணவுக்காக அதிகாலையில் கூரையை பெயர்த்து யானை அட்டகாசம் செய்துள்ளது.
இச்சம்பவம் நேற்று(02)ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொத்துவிலையடுத்துள்ள கோமாரிப்பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.அதேவேளை கோமாரி பிரதேசத்தில் மரவள்ளிக்காலையை சேதப்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் யானைத்தாக்கத்தால் கோமாரிக்கிராமமே அச்சத்தில்; மூழ்கியுள்ளது.

அங்கு புகுந்த காட்டு யானைகள் சின்னதம்பி செல்வராசா என்ற குடும்பஸ்தரைத் தாக்கிவிட்டு அவரது வீட்டின் கூரையை உடைத்து உள்ளிருந்த நெல் அரிசி பச்சை இலைக்கறிகளை உண்டது. வீட்டையும் துவம்சம் செய்தது. நித்திரையிலிருந்த செல்வராசா என்ற குடும்பஸ்தர் ஓடி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.

அத்துடன் நின்றுவிடாது அருகிலுள்ள மரவள்ளிக்காலைகளுக்கும் சென்று பயிர்பச்சைகளையும் சேதப்படுத்தியுள்ளது.
இவ்வாறு சேதமாக்குவதால் கிழங்கு பெரிதாகமுன்னரே நேற்று அவற்றைப்பிடுங்கி வீதிகளில் விற்பனை செய்வதைக்காணக்கூடியதாயிருந்தது.
இது தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் நேரில் சென்று பார்வையிட்டு சேதவிபரத்தை கிராமசேவை உத்தியோகத்தரிடம் அறிவித்துள்ளார்.

கூடவே கிராமஅபிவிருத்திச்சங்க தலைவர் ஜோய் நோக்கிரட்டும் சென்றுள்ளார்.

உறுப்பினர் த.சுபோதரன் இதுவிடயத்தை லாகுகலையிலுள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாhரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறு பலதடவைகள் அவர்களிடம் தெரிவித்தபோதிலும் அவர்கள் வந்து பார்ப்பதில்லi என பொதுமக்களும் உறுப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேவேளை கிராமசேவை உத்தியோகத்தர் மேல் நடவடிக்கை எடுப்பதாகக்கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட அக்குடும்பம் நிர்க்கதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :