ஓட்டமாவடி பிரதேசத்தில் பொதுமக்கள் நடமாடும் இடங்களை தொற்று நீக்கும் நடவடிக்கை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் இன்று (9) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைந்த வகையில் இந்த தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, பொதுச் சந்தை, பஸ் தரிப்பிடங்கள், மீன் விற்பனை நிலையங்கள், புடவைக் கடைகள், சலூன் கடைகள் உட்பட வர்த்தக நிலையங்கள் போன்றவற்றுக்கு தொற்று நீக்கப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் இடம்பெற்ற இப் பணியில் பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து கொண்டு தொற்று நீக்கும் வேலையினை மேற்கொண்டனர்.
0 comments :
Post a Comment