ஓட்டமாவடியில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் தொற்று நீக்கம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி பிரதேசத்தில் பொதுமக்கள் நடமாடும் இடங்களை தொற்று நீக்கும் நடவடிக்கை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் இன்று (9) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைந்த வகையில் இந்த தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, பொதுச் சந்தை, பஸ் தரிப்பிடங்கள், மீன் விற்பனை நிலையங்கள், புடவைக் கடைகள், சலூன் கடைகள் உட்பட வர்த்தக நிலையங்கள் போன்றவற்றுக்கு தொற்று நீக்கப்பட்டுள்ளன.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில் இடம்பெற்ற இப் பணியில் பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து கொண்டு தொற்று நீக்கும் வேலையினை மேற்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :