புனித நோன்புப் பெருநாள்; நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை!



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஹிஜ்ரி 1442 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மஃரிப் தொழுகைக்குப் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசல் மாநாட்டு மண்டபத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி அப்துல் ஹமீத் பஹ்ஜி தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழானை நாளை வியாழக்கிழமை 30 ஆக பூர்த்தி செய்து புனித நோன்புப் பெருநாளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி கொண்டாடுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களை பிறைக்குழு ஏகமனதாக தீர்மானித்து நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

இம்மாநாட்டில் பிறைக் குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் அங்கத்தவர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டவியல் நிலைய அதிகாரிகள், சகல பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :