சாய்ந்தமருது, காரைதீவு வைத்தியசாலைகளில் கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் வழங்கும் நிகழ்வு !



நூருல் ஹுதா உமர்-
கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் ஆலோசனையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ரி.எஸ்.ஆர்.ரி.றஜாப், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சனூஸ் காரியப்பர், டெங்கு மலேரியா தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் நௌசாத், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஜீவராணி சிவசுப்ரமணியம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு தடுப்பூசியினை பெற்றுக் கொண்டனர்.

மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீரின் தலைமையில் காரைதீவு வைத்தியசாலையில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகர், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோத்தர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :