கதிர்காமக்கந்தனின் ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை10ஆம் திகதி ஆரம்பம்! கன்னிக்கால் நடும் வைபவம் நேற்று: பாதயாத்திரை ரத்து?:விழா முடிவு பின்னர்.



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 24ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

கொடியேற்றத்திற்கு 45தினங்களுக்கு முன் நடைபெறும் மரபுரீதியான பாரம்பரிய கன்னிக்கால் அல்லது கொடிக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடும் சடங்கு நேற்று(27)அதிகாலை 4.30மணியளவில் கதிர்காமத்தில் சுகாதாரமுறைப்படி நடைபெற்றது.

கொரோனாச்சூழல் நிலவுகின்ற காரணத்தினால் சுகாதாரத் துறையின் உத்தரவுகளைத் தொடர்ந்தே 2021 ஆண்டு எசலா விழா ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி, பிரமாண்ட ஊர்வலத்துடன் ஜூலை 24 அன்று நிறைவடைவது பற்றி முடிவெடுக்கப்படும் என ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை பாரம்பரிய கதிர்காம பாதயாத்திரை கடந்த வருடத்தை போல் இம்முறையும் கொரோனா ரத்துச்செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :