அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை –பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

ரக்கோணம் அருகே சோகனூர் எனும் கிராமத்தில் இரு தலித் இளைஞர்கள் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாதிய வன்மத்தோடு நடைபெற்றுள்ள இப்படுகொலை சம்பவத்தில் மேலும் சில இளைஞர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தைச் சார்ந்த அர்ஜீன், சூர்யா, மதன், வல்லரசு, சவுந்தரராஜன் ஆகிய தலித் இளைஞர்களுக்கும் அருகே உள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கிடையில் சில பிரச்சனைகள் இருந்ததன் தொடர்ச்சியாகவே சாதிய வன்மத்துடன் இந்தப் படுகொலை நடந்துள்ளது.

தமிழகத்தில் இதுபோல் அவ்வப்போது நடைபெறும் ஆணவப்படுகொலைகள் மற்றும் சாதிய வன்ம படுகொலைகள் மீது உரிய விரைவான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாததன் விளைவே தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய அதிர்ச்சியளிக்கக்கூடிய சாதிய வன்மத்தோடு நடைபெறும்படுகொலைகள். 
எனவே படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் தாக்குதலில் காயமுற்றுஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்குவதோடுசாதிய வன்மத்தோடு தாக்குதலில் ஈடுபட்டு படுகொலை செய்த குற்றவாளிகள், குற்றச்செயலில்ஈடுபட தூண்டியோர் உட்பட அனைவரின் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :