மாளிகைக்காட்டு பிரதேசத்தில் சுகாதார தரப்பினர் அதிரடி : சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை !



நூருல் ஹுதா உமர்-
நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸீமா வஸீரின் ஆலோசனைக்கு இணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் டீ. வேல்முருகு, பொது சுகாதார பரிசோதகர்களான கே.ஜெமீல், எம்.எம்.எம். சப்னூஸ் ஆகியோர் இணைந்து நேற்று (29) மாலை திடீர் பரிசோதனை நடவடிக்கையில் இறங்கினர்.

இதன்போது காரைதீவு, மாளிகைக்காடு ஆகிய இடங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக் கவசம் அணியாதோர் என பலரும் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கும் இதன்போது திடீர் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு அந்த உணவகங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :